ஜார்ஜ்டவுனில் 10 கார்கள் ஒன்றன் பின் ஒன்றாக மோதி விபத்து
By
27/01/2012 23:57:00
ஜோர்ஜ்டவுன், ஜனவரி 28- ஜாலான் கெலுகோரிலிருந்து நகரத்திற்குள் நுழையும் சாலையில் இன்று காலை ஏற்பட்ட வாகன விபத்தால் சுமார் மூன்று மணிநேரம் போக்குவரத்து நிலைக்குத்தியது.
இன்று முற்பகல் 11.50 மணிக்கு நிகழ்ந்த அவ்விபத்தின் போது மண் லாரி ஒன்று பழுதடைந்து நடுசாலையில் திடீரென நின்றுள்ளது.
“இதனால் அந்த லாரியின் பின்னால் வந்துக்கொண்டிருந்த ஒரு குப்பை லாரி உட்பட 9 கார்கள் ஒன்றன் பின் ஒன்றாக மோதிக்கொண்டன. இவ்விபத்தால், வாகனத்திற்குள் சிக்கிக்கொண்ட வாகனமோட்டிகளைத் தீயணைப்பு வீரர்கள் வந்து மீட்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டதாக சாலை போக்குவரத்து பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
ஆயினும், அதிர்ஷ்டவசமாக இவ்விபத்தில் யாருக்கும் உயிரிழப்பும், கடுமையான காயங்களும் ஏற்படவில்லை. அனைவரும் பினாங்கு மருத்துவமனையில் வெளிநோயாளிகளாக சிகிச்சைப் பெற்றதாகவும் அவர் தெரிவித்தார்.



<a href="http://www.tamil10.com/" rel="dofollow">http://www.tamil10.com/</a>
<a href="http://blog.tamil10.com/?p=154">ஒட்டுப்பட்டை பெற </a>
நன்றி
Post your comment