இந்தியாவின் 63-வது குடியரசு தினம்- சென்னை கோலாகல கொண்டாட்டம்
சென்னை, ஜனவரி 26- இந்தியாவின் 63-வது குடியரசு தினக் கொண்டாட்டம் இன்று சென்னையில் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. ஆளுநர் ரோசய்யா கொடியேற்றிவைத்து அணி வகுப்பைப் பார்வையிட்டார். தமிழக முதல்வர் ஜெயலலிதா, அமைச்சர்கள் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துக்கொண்டனர்.
இந்த விழாவை சீர்குலைக்க தீவிரவாதிகள் சதிநாச வேலையில் ஈடுபடலாம் என மத்திய உளவுத்துறை எச்சரித்திருந்ததால், தமிழகம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மாநில எல்லைகள் சீல் வைக்கப்பட்டதுடன், வாகன சோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
சென்னை மெரினா கடற்கரை காந்தி சிலை அருகே தமிழக அரசு சார்பாக நடைபெற்ற குடியரசு தின விழா கொண்டாட்டத்தில் முப்படைகள், மற்றும் காவல்துறையினரின் பல்வேறு பிரிவுகள் சார்பில் அணிவகுப்புகள் நடைபெற்றது. மேலும் பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளும், அரசு துறையினரின் அலங்கார ஊர்தி அணிவகுப்பும் நடைபெற்றது.



Post your comment