சிரியா செம்பிறைச் சங்கத் தலைவர் சுட்டுக் கொலை
By
26/01/2012 11:41:00
ஜெனிவா, 26 ஜனவரி- சிரியா செம்பிறைச் சங்க தலைவர் நேற்று Idlib நகரில் சுட்டுக்கொல்லப்பட்டதாக அனைத்துலக செஞ்சிலுவை சங்கம் (ICRC) அறிவித்தது.
“ சிரியா செம்பிறைச் சங்கத் தலைவரான அப்துல் ரசாக் ஜ்பெரோ நேற்று, டம்ஷிக்கிலிருந்து Idlib நகரை நோக்கிச் சென்றுக்கொண்டிருந்தபோது சுட்டுக்கொல்லப்பட்டார். அவர் சுட்டுக்கொல்லப்பட்டதற்கான காரணம் ஆராயப்பட்டு வருகிறது.
“ICRC இக்கொலைச் சம்பவத்திற்குக் கண்டனம் தெரிவிக்கிறது. சிரியா இன்னமும் மருத்துவ குழுவுக்கு மதிப்பளிக்கவில்லை என்பதையே இக்கொலைச் சம்பவம் பிரதிபலிக்கிறது” என மேற்காசியா ICRC நடவடிக்கைக் குழு தலைவர் Beatrice Megevand-Ronggo தெரிவித்தார்.



Post your comment