
மாலை 6 மணியளவில் இடிபாடுகளில் இருந்து 16 பாதிக்கப்பட்டவர்களை அதிகாரிகள் வெற்றிகரமாக மீட்டுள்ளதாக மாகாண காவல்துறைத் தலைவர் டித் நரோங் தெரிவித்தார்.
பாதிக்கப்பட்டவர்களில் மூன்று பேர் சாதாரண காயாங்களும், மேலும் 13 பேர் – இரண்டு துறவிகள் உட்பட ஒரு கட்டுமான மேலாளர் ஆபத்தான காயங்களுக்கு உள்ளாகினர்.
“உணவு மண்டபத்தில் பலகைகளை வைத்திருந்ததால் பலவீனமாகி கட்டுமானம் சரிவுக்கு காரணமாக இருக்கலாம். இருப்பினும், யாரும் கைது செய்யப்படவில்லை.” “நாங்கள் கட்டுமானத் தொழிலாளர்களின் மேலாளரைத் தேடினோம், ஆனால் அவர் சரிவினால் மயக்கமடைந்திருந்ததை கண்டறிந்தோம்” என்று நரோங் கூறினார்.
பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக துணை மருத்துவர்களும் ஆம்புலன்ஸும் சம்பவ இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதே நேரத்தில் மீட்புக் குழுக்கள் முதல் உதவியுடன் தேடல் பணியும் முடக்கிவிடப்பட்டது