மண்டியா, ஏப்ரல்,18- கர்நாடகா மாநிலத்திலுள்ள மண்டியா என்ற இடத்தில் திடிரென ஏராளமான குரங்குகள் இறந்து கிடந்ததைக் கண்ட மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
பாண்டவபுரா என்ற வனப்பகுதியை ஒட்டிய இந்த ஊரிலுள்ள பிரசித்திப் பெற்ற கோயில் வட்டாரங்களில் குரங்குகள் இறந்து கிடந்தன. மேலும் பல குரங்குகள் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தைக கண்டு பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
# விஷம் வைக்கப்பட்ட பின்னர் மருத்துவர்களால் காப்பாற்றப்பட்ட தாயும் சேயும்..#
இது குறிது மக்கள் உடனடியாகப் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். மேலும் வன விலங்குத் துறையினருக்கும் புகார் செய்யப்பட்டது. வனத் துறையினர் விரைந்து வந்து பார்த்தபோது பல குரங்குகள் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தன. உடனடியாக அவற்றுக்குச் சிகிச்சை அளிக்கும் பணியில் அவர்கள் ஈடுபட்டனர்.
அவற்றில் சிலவற்றை மட்டுமே அவர்களால் காப்பாற்ற முடிந்தது. இதற்கு என்ன காரனம் என்று குரங்குகளிடம் மருத்துவப் பரிசோதனை செய்து பார்த்ததில் அவற்றுக்கு விஷம் வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.
மிகவும் கொடிய விஷம் என்பதால் பல குரங்குகள் உயிர் பிழைக்க வாய்ப்பில்லாமல் போனதாக வன விலங்குத் துறை மருத்துவ அதிகாரிகள் கூறினர்.
இந்தக் குரங்களுக்கு விஷம் வைத்தது யார்? இரக்கமற்ற அந்தக் கொடியவர்கள் யார்? என்பதைக் கண்டறியும் புலன் விசாரணையைப் போலீசார் தீவிரப்படுத்தி உள்ளனர். இவ்வட்டாரத்திலுள்ள சில விவசாயிகளும் போலீசாரால் விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.
பயிர் விளைச்சல்களுக்கு இந்தக் குரங்குகளால் சேதம் ஏற்படும் என அஞ்சி அவர்களில் யாரேனும் விஷம் வைத்திருக்கக்கூடுமோ என போலீசார் சந்தேகிக்கின்றனர்.
குரங்களுக்கு விஷம் வைத்துக் கொன்ற கொடியவர்கள் யார்?
Tools
Typography
- Font Size
- Default
- Reading Mode